வார இறுதி நாட்களில் பயணத்தடை இல்லை
நாட்டில் வார இறுதி நாட்களில் பயணத்தடை அமுல்ப்படுத்தும் தீர்மானம் இல்லை. என தேசிய கொவிட் தடுப்பு செயலணி தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்றைய தினம் தேசிய கொவிட் தடுப்பு செயலணி கூடியதுடன் சமகால கொரோனா நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்திருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed